சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அல்லிநகரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஶ்ரீ தண்டீஸ்வரர் அய்யனார் திருக்கோயிலில் புரட்டாசி மாதம் வளர்பிறை பிரதோஷ வழிபாடு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
முன்னதாக மூலவர் தண்டீஸ்வரர் அய்யனாருக்கு பலவண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது இதனை தொடர்ந்து ஆதிமூல லிங்கத்திற்கும் நந்தியப் பெருமானுக்கும் குரு பகவான் தட்சிணாமூர்த்திக்கும் சிறப்பு அபிஷேகங்கள் பக்தர்கள் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
அய்யன் தரிசனம் காண அல்லிநகரம் கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் இருந்து ஏறாளமான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தனர். வருகை புரிந்த பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அய்யன் அருள் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.