குளச்சல், மே..24-
குளச்சல் அருகே சாஸ்தான் கரை பகுதியை சேர்ந்தவர் மணி மனைவி லீலா பாய் (62). நேற்று லீலா பாய் வெள்ளிச்சந்தைக்கு சென்று உறவினர்களை பார்த்து விட்டு, ஊருக்கு செல்வதற்காக மீண்டும் வெள்ளிச்சந்தை பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக குளச்சல் துறைமுகம் தெருவை சேர்ந்த சிபி என்பவர் பைக்கில் வந்தார். மூதாடியை தெரியும் என்பதால் சிபி பைக்கில் மூதாட்டி ஏற்றி சென்று கொண்டிருந்தார். மண்டைக்காடு அருகே ஏவிஎம் கால்வாய் சந்திப்பு பகுதியில் செல்லும் போது, பின்னால் பெரிய விளையை சேர்ந்த விக்னேஷ் என்பவர் ஓட்டி வந்த கார் பைக் மீது மோதியது.
இந்த விபத்தில் பின்னால் அமர்ந்து சென்ற லீலா பாய் கீழே விழுந்த படுகாயம் அடைந்தார். சிபி காயங்கள் இன்றி தப்பினார். இதை அடுத்து அக்கம் பக்கத்தினர் லீலா பாயை மீட்டு குளச்சலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மண்டைக்காடு போலீசார் காரை ஓட்டிச் சென்ற விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.