தேனி ஆகஸ்ட் 12:
தேனியில் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி மாவட்டத் தலைவரான தேனியில் தேனி பாலசங்கா ஸ்மார்ட் சைக்கிள் நிறுவனம் மற்றும் தேனி மாவட்ட போலீஸ் துறை ஆகிய இருவரும் இணைந்து சர்வதேச போதை ஒழிப்பு தினம் மற்றும் நாம் இந்திய திருநாட்டின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சைக்கிள் போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு பேரணியை தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்வி ஷஜீவனா கொடியசைத்து துவக்கி வைத்தார். தேனி நேரு சிலை முன்பு துவங்கிய பேரணி லட்சுமிபுரம் மாவட்ட நீதிமன்றம் அலுவலகம் வரை சென்று சுமார் 10 கிலோமீட்டர் சைக்கிள் பேரணி நடைபெற்றது இந்த பேரணியில் போதைப்பொருள் அனுபவிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் போதைப் பொருளால் நம் உடலுக்கு ஏற்படும் தீமைகள் இதனால் ஏற்படும் நோய்கள் மதுவால் நம்மை நம்பியுள்ள குடும்பத்தை நடுத்தெருவுக்கு கொண்டு வரும் போதை பழக்கத்தை கைவிட வேண்டும் போன்ற பதாகைகளை ஏந்தியும் கோஷங்களை எழுப்பியும் பேரணியில் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆவேசத்துடன் போதைப் பொருளை ஒழிக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்தினார்கள் இந்த பேரணியில் தேனி ஏ டி எஸ் பி சுகுமார் டிஎஸ்பி பார்த்திபன் தேனி போலீஸ் துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டு போதைப்பொருள் குறித்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.