கன்னியாகுமரி,நவ.16-
குமரி மாவட்ட பா.ஜ., ஐ.டி.விங் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் சுபாஷ் விடுத்துள்ள செய்தி குறிப்பில்;
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான கடற்கரை பகுதியில் அமைந்துள்ள 46.5 சென்ட் நிலத்தை இந்து அறநிலைத்துறை,மாவட்ட கலெக்டரின் பரிந்துரை படி கன்னியாகுமரி பேரூராட்சி நிர்வாகத்திற்கு பராமரிப்பு பணிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி பேரூராட்சி சாலையின் பல இடங்களில் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது.ஒருசில இடங்களில் சாக்கடைகள் சாலையில் ஆறு போல் ஓடுகிறது.இதை சீரமைக்கவே பேரூராட்சி நிர்வாகத்திற்கு முடியவில்லை.சுற்றுலா வரும் பணிகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்க கூட பேரூராட்சி நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை .
இப்படிபட்ட மோசமான நிலையில் பேரூராட்சி நிர்வாகம் இருந்து வரும் நிலையில்,பராமரிப்பு பணிக்காக அறநிலையத்துறை பகவதியம்மன் கோயில் நிலத்தை பராமரிப்பு செய்ய பேரூராட்சி நிர்வாகத்திடம் வழங்கியது வேடிக்கையாக உள்ளது.
இந்த பகுதியில் ஆளும் கட்சியினர் தங்களுக்கு சாதகமான பூங்கா ஒன்றை அமைக்க திட்டமிட்டு வருகிறது தகவல் வெளியாகியுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் கோவில் நிலத்தை பராமரிப்பு பணிக்காக பேரூராட்சிக்கு வழங்கியதை திரும்பபெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.