நாகர்கோவில் செப் 10
குமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த காசி, சமூக வலைத்தளங்களில் தன்னை நல்லவன் போல பிம்பப்படுத்தி,
பல பெண்களை ஏமாற்றி பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட காசியின் ஜாமின் மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ஆயுள் தண்டனையை நிறுத்திவைத்து ஜாமின் வழங்கக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அதற்கு அரசுத் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது.
பெண்களை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் குறித்து புகார் எழுந்து, இந்த சம்பவம் பெரும் விவாதத்தை தமிழக அளவில் உருவாக்கி இருந்தது.இந்த விஷயம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த பெண்களின் அந்தரங்க விடியோவும், வெளிநாட்டில் இருந்த அவனின் நண்பனால் வெளியிடப்பட்டது. இதனையடுத்து, காசிக்கு எதிரான குற்றவழக்கு சிபிசிஐடி வசம் சென்று, விசாரணை தீவிரம் அடைந்தது. விசாரணையை தொடர்ந்து, காசிக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதனிடையே, காசி தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என நாகர்கோவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பல்வேறு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மதுரை உய்ரநீதிமன்ற கிளையில் ஜாமின் கேட்டு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள், காசிக்கு ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்தனர். அவரின் கோரிக்கை மனுவும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சிபிசிஐடி காவல் துறையினர் பதில் மனுதாக்கல் செய்யவும் உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.



