கன்னியாகுமரி ஆக 13
குமரி மாவட்டம் பொட்டல் குளத்தைச் சேர்ந்த முனைவர் பெ.இராசமார்த்தாண்டன் எழுதிய “அய்யா வைகுண்டர் வேண்டல் வெண்பாக்கள் 1008” எனும் நூல் வெளியீட்டு விழா சுவாமி தோப்பு வடக்கு வாசல் அய்யா வைகுண்டர் தவப்பதியில் வைத்து நடைபெற்றது.
விழாவிற்கு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஏகாம்பரம் தலைமை தாங்கினார். பொறிஞர் இரா. வினோமார்த்தாண்டன் வரவேற்றார். சென்னை அய்யா வைகுண்டர் திருப்பதி செயலாளர் பொறிஞர் ஆ.கிருஷ்ணமணி அறிமுக உரையாற்றினார்.
சாமிதோப்பு பதி நிர்வாகி பூஜிதகுரு அ.சுவாமி நூலை வெளியிட்டு ஆசியுரை வழங்கினார். ஓய்வு பெற்ற முதன்மைக் கல்வி அலுவலர்
வை.அனந்தகிருஷ்ணன் நூலை பெற்று வாழ்த்துரை வழங்கினார்.
ஓய்வு பெற்ற வனச்சரக அலுவலர் சிவமாலையா, டாக்டர் எஸ்.எம்.குமார், உழவர் பெருமன்ற தலைவர் மீனாட்சி சுந்தரம், வழக்குரைஞர் எஸ்.பி. அசோகன், சாமிதோப்பு பதி தர்மகர்த்தா பூஜிதகுரு இராஜசேகரன், மார்த்தாண்டம் துறை அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முத்துநாடார், வங்கி வர்த்தக ஆய்வு பிரிவு மேலாளர் ஹரிஷ் குமார், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
முன்னாள் அரசினர் மருத்துவக் கல்லூரி டீன் இராதாகிருஷ்ணன் நூலின் மதிப்புரை வழங்கினார். பொற்கிழி கவிஞர் நீல மதுமயன் நூல் ஆய்வு உரை வழங்கினார். நூலாசிரியர் முனைவர் பெ.இராச மார்த்தாண்டன் ஏற்புரை வழங்கினார். நாகர்கோவில் பேரூராட்சிகள் உதவி இயக்குனரகம் செயல் அலுவலர் (நிர்வாகம்) பெ.ராஜேஸ்வரன் நன்றி கூறினார்.