நெகிழி பயன்பாடு குறைத்தல் விழிப்புணர்வு/சங்கரன் கோவில் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நகர மன்ற தலைவர் உமா மகேஸ்வரி சரவணன் ஆணையாளர் சபாநாயகம் சுகாதார அலுவலர் வெங்கட்ராமன் ஆகியோர் ஆலோசனைப்படி சுகாதார ஆய்வாளர்கள் மாரிச்சாமி மாரிமுத்து ஏற்பாட்டின் படி தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் சார்பாக திருவேங்கடம் சாலையில் உள்ள வணிக வைசிய சங்க உயர்நிலைப் பள்ளியில் தூய்மை பணியின் அவசியம், சுற்றுச்சூழல் தூய்மை, குப்பைகளை பிரித்து வழங்குவதின் முக்கியத்துவம், நெகிழி பயன்பாட்டை குறைத்தல் குறித்தும் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டு துண்டு பிரசுரம் மூலம் மாணவர்களுக்கு அதன் தாக்கத்தினை ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தூய்மை இந்தியா திட்டமேற்பார்வையாளர் மற்றும் பரப்புரையாளர்கள் கலந்து கொண்டனர்.



