ஆரல்வாய்மொழி. நவ.05:
குமரி மாவட்டம் செண்பகராமன்புதூரில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பரிதாப பலி ஆட்டோவில் இருந்த ஒருவர் படுகாயம்
செண்பகராமன்புதூர் சிதம்பரபுரம் பகுதியை சார்ந்த அன்பையன் என்பவர் மகன் முருகன் 45 இவருக்கு ஜெயராணி என்ற மனைவியும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர் முருகன் தனக்கு சொந்தமான பயணிகள் ஆட்டோவினை தினமும் செண்பகராமன்புதூர் ஆற்றுப்பாலம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் நிறுத்தி வாடகைக்கு ஓட்டி வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை செண்பகராமன்புதூர் காந்திநகர் பகுதியை சார்ந்த பகவதி முகேஷ் 34 என்பவரும் அவருடன் மேலும் இருவரும் முருகனின் ஆட்டோவை வாடகைக்கு பிடித்து செண்பகராமன்புதூரில் இருந்து நாகர்கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர் அப்பொழுது செண்பகராமன்புதூர் அடுத்த கண்ணன்புதூர் பட்டர்குளம் காலனி பஸ் ஸ்டாப் அருகே வரும்பொழுது திடீர் என்று ஒருவர் ரோட்டினை கடக்க முற்பட்டு உள்ளார்.இதனை சற்றும் எதிர்பார்க்காத முருகன் அந்த நபர் மீது ஆட்டோ மோதி விடக்கூடாது என்பதற்காக முருகன் தனது ஆட்டோ வினை பிரேக் போடவும் கண்ணிமைக்கும் நேரத்தில் ஆட்டோவானது நடு ரோட்டில் கவிழ்ந்து உருண்டது.இதனால் இடிப்பாட்டில் சிக்கிய முருகன் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார் மேலும் ஆட்டோவில் பின்புறம் இருந்த பகவதிமுகேஷ் என்பவரும் படுகாயம் அடைந்தார் இத்தகவல் அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து ஆட்டோவின் இடிப்பாட்டில் சிக்கி இருந்த முருகன் மற்றும் பகவதிமுகேஷ் மற்றும் பின்புறம் இருந்த மற்ற இருவரையும் ஆட்டோவில் இருந்து வெளியே மீட்டனர் இதனிடையே அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கும் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் வந்து பரிசோதித்தபோது முருகன் இறந்தது தெரிய வந்தது படுகாயம் அடைந்த பகவதி முகேஷ் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார் மேலும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆரல்வாய்மொழி போலீசார் விபத்து பற்றி தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.