தருமபுரி கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக சார்பில் மாவட்ட கட்சி அலுவலகத்திலும் மற்றும் உழவர் சந்தையில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கிழக்கு மாவட்ட செயலாளர்தடங்கம் சுப்பிரமணி, தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மணி, மாவட்ட பொருளாளர் தங்கமணி, நகர கழக செயலாளர் நாட்டான் மாது, மேற்கு ஒன்றிய செயலாளர் காவேரி, தருமபுரி மாவட்ட தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கௌதம், இளைஞர் அணி துணை அமைப்பாளர் அசோக் குமார், பொன் மகேஸ்வரன், உதயசூரியன், தர்ம செல்வன், வீரமணி, மாதேஸ்வரன், செல்வராஜ், உழவர் சந்தை நிர்வாக அலுவலர் இளங்கோவன், வேளாண் விற்பனை குழு செயலாளர் ரவி, பாளை அன்பு, பாண்டுரங்கன் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பொங்கல் விழாவை சிறப்பித்தார்கள்.



