வேலூர் மாவட்டம்
வேலூரில் குறைந்தவிலையில்
வீட்டு மனை தருவதாக வந்த விளம்பரத்தை நம்பி ஏமார்ந்த சம்பவம் அங்கு அரங்கேறி உள்ளது- 2 கோடிக்கு மேல் ஆபேஸ் செய்த ரியல் எஸ்டேட் நிறுவனம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது
வேலூர்_23
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்வு கூட்டம் இன்று நடந்தது.
ஏடிஎஸ்பி கோட்டீஸ்வரன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், காட்பாடி தாராபடவேடு பவானி நகரை சேர்ந்த கட்டிட மேஸ்திரி சங்கர் என்பவர் புகார் மனு அளித்தார். அதில்
‘கட்டிட மேஸ்திரியான நான், ஜெயராமன் என்பவரின் மூலம் வேலூர் விருபாட்சிபுரத்தில் செயல்பட்டு வரும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் குறைந்த விலையில் மாதத்தவணை முறையில் வீட்டுமனை பெறும் குபேரா திட்டத்தில் இணைந்தேன்.
2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 60 மாதங்கள் மாதம் 2,500 வீதம் செலுத்தி முடித்தேன் ஆனால் சொன்னபடி வீட்டுமனை தரவில்லை.
தொடர்ந்து கேட்டபோது, ரிஜிஸ்தர் செலவு என்று கூறி மேலும் 50 ஆயிரம் பெற்றுக் கொண்டனர்.ஆனாலும் வீட்டுமனை தரவில்லை. எனக்கு மேற்கண்ட நிறுவனத்திடம் இருந்து வீட்டுமனை அல்லது பணத்தை பெற்றுத்தர வேண்டும்.அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து அவர் கூறியதாவது :
அவர் அளித்த புகாரின் அடிப்படையில் அவரிடம் செய்தியாளர் கேட்ட கேள்விக்கு அளித்த பதில் :
2012 ஆம் ஆண்டு மாதத்தவனின் மூலம் தொகையை கட்டத் தொடங்கினேன் 2017 ஆம் ஆண்டு இதற்கான கணக்கு முடிவடைந்து விட்டது. அதை முடிந்து எட்டு வருடங்கள் காலங்கள் ஆகியும் தற்போது வரை எனக்கான இடம் வீட்டுமனை பதிவு செய்து தரவில்லை. தொடர்ந்து அவரிடம் கேட்டபோது என்னை மிரட்டுகிறார்கள். சில மாதங்கள் முன் நாற்பது ஆயிரம் பணம் கொண்டு வந்தால் இதற்கான பதிவு செய்து கொள்ளலாம் என்று சொன்னார்கள் அந்த 40 ஆயிரம் பணம் கட்டிவிட்டேன்.தற்போது வரை பதில் தரப்படவில்லை இதைப்போல் 60க்கும் மேற்பட்டவர்கள் தொகையை கட்டியுடன் ஆனால் இதில் பாதி பேருக்கு மட்டுமே பதிவு செய்ததாக கூறப்படுகிறது இதன் உண்மை தன்மை தெரியவில்லை மேலும் அன்றாட தினக்கூலிக்கு சென்று அவர்கள் மிக கடினமான முறையில் இந்த பணத்தை கட்டினார்கள் இவர்களிடம் கட்டிய கனவை தற்போது இந்த நிறுவனத்தினர் முறையாக பணமும் திருப்பி அளிக்காமல் அவர்களிடம் இடத்தையும் பதிவு செய்து கொடுக்காமல் நோக்கி ஏமாற்றுவதாக தெரிகிறது இது குறித்து போலீஸிடம் புகார் அளித்துள்ளேன். விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை எடுத்த தர வேண்டும் என கேட்டுள்ளார்.
வேலூரில் நடைபெற்ற ரியல் எஸ்டேட் முறை கேட்டால் மக்கள் மத்தியில் தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.