ராமநாதபுரம், ஜுன் 2 –
ராமநாதபுரம் மாவட்டம்
தொண்டி மக்களின் நீண்ட கால கோரிக்கையான
தொண்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதர நிலையத்தை தரம் உயர்த்தி அரசு பொது மருத்துவமனை ஆக்கப்படும் என
தமிழக முதல்வர் தொண்டி மக்களுக்கு தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்தார். வாக்குறுதி அப்படியே கிடப்பில் உள்ள நிலையில் தற்போது பேரூராட்சி அலுவலகம் புதிய கட்டடம் கட்டப்படும் நிலையில் போதிய இடமின்றி அரசு மருத்துவமனை திட்டம் கைவிடப்படும் சூழல் உருவாகி வருகிறது எனவே அனைத்து சமுதாய மக்களும் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி உரிய முடிவை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் தமுமுகவின் மாநில செயலாளர் சாதிக் பாட்சா கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது;
தொண்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
அரசு பொது மருத்துவமனையாக தரம் உயர்த்தி தருவதாக தமிழ்நாடு முதலமைச்சர் வாக்குறுதி அளித்தார்கள்.
ஆனால் இது நாள் வரை தொண்டி மக்களின் கோரிக்கை நிறைவேறாமல் கிடப்பில் உள்ளது.
மேலும் அரசு மருத்துவமனை அருகே காலியிடமாகவும்
சில இடங்களில் ஆக்கிரமிப்பாளர்கள் கையிலும் இருக்கக்கூடிய இடத்தில்
தொண்டி பேரூராட்சி புதிய அலுவலகம் கட்டுவதற்கு உண்டான பணிகள் நடந்து வருகிறது.
ஆனால் சுமார் 50 சென்ட்க்கு மேல் உள்ள இடம் வருவாய் கணக்கில் மிகவும் குறைவாக இருப்பதாக மக்கள் கருதுகிறார்கள்.
இந்த நிலையில் தொண்டி பேரூராட்சிக்கு புதிய கட்டிடம் அந்த இடத்தில் வருவது மூலமாக தொண்டி மக்களுக்கு பலன் இல்லை என கருதுகிறார்கள். தொண்டி மக்களுக்கு மிக முக்கியமானது தற்போது அரசு மருத்துவமனை தான்.
ஏழை எளிய மக்கள் பயன்படக்கூடிய வகையில் இருக்கும் அரசு பொது மருத்துவமனைக்கு அவசியம் இடம் தேவைப்படும்.
எனவே மக்கள் நலன் கருதி உண்மை நிலை மக்கள் அறியும் படி பேரூராட்சியின் செயல்பாடுகள் அமைந்தால் சிறப்பாக இருக்கும்.
மக்கள் நலனில் அக்கரையோடு செயல்படும் தொண்டி ஐக்கிய ஜமாத்
இவ்விசயத்தில் திரும்ப ஒரு ஆலோசனை செய்து நல்ல முடிவை எடுப்பதற்கு முயற்சி எடுக்க வேண்டும்.
தொண்டியில் உள்ள அனைத்து மக்களும் தொண்டி அரசு மருத்துவமனை மேம்பட வேண்டும் என்ற உயரிய சிந்தனை உள்ளவர்கள் தான்.
எனவே மக்கள் நலன் கருதி சரியான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.
தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில்
பல்வேறு விதமான போராட்டம் தொண்டி அனைத்து சமூக தலைவர்களோடும் மக்களோடும் இணைந்து நடத்தியதின் அடிப்படையில் தொண்டி மேம்படுத்தப்பட்ட அரசு சுகாதார நிலையம் வந்தது.
வருவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்திருக்கின்றோம் திமுக ஆட்சியில் தான் இது நடந்தது
இன்று பலர் அரசு மருத்துவமனைக்காக பல்வேறு முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் மருத்துவமனை மேம்பாட்டிற்கு நிச்சயம் இடம் தேவைப்படும்.
குறைவான இடம் இருந்து அது பேரூராட்சி கட்டடம் மட்டும் கட்டப்பட்டு அரசு மருத்துவமனைக்கு போதிய இடம் இல்லாமல் போனால் மிகவும் துரதிஷ்டமான ஒரு சூழ்நிலை ஏற்படும்.
எனவே மக்கள் நலன் கருதி அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி இதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.