சிவகங்கை:பிப்:22
சிவகங்கை மாவட்டம் வேம்பத்தூரை அடுத்துள்ள கல்லூரணி கிராமத்தில் உள்ள அஞ்சூர்செல்வி அருள்மிகு உத்தம மீனாட்சியம்மன் கோவில் பரம்பரை முறைசாரா அறங்காவலர் குழுவினர் இன்று
கோவில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் அவர்களின் பரிந்துரையின்பேரில் திமுக தலைமைப்பொதுக்குழு உறுப்பினர் அறங்காவலர் ஜெயமூர்த்தி , சிவகங்கை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை
உதவி ஆணையர்
கவிதா, ஆய்வாளர் இசக்கியம்மாள் ஆகியோரது முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அறங்காவலர்களாக மொத்தம் ஐந்து நபர்கள் பொறுப்பேற்றுக்கொண்டனர்.அதில் சருகனேந்தல் அய்யனார், கீழக்கோட்டை கல்லூரணி செல்லம்,வேம்பத்தூர் அக்ரஹாரம் கிருஷ்ணன்,கானூர் வடக்குத்தெரு செல்வவிநாயகம் மற்றும் மானாமதுரை கிழக்கு ஒன்றிய இளைஞரணி கல்லூரணி கணேசன் ஆகியோர் முறைப்படி உறுதிமொழி எடுத்துக்கொண்டு அறங்க்வலர்கள்க பொறுப்பேற்றனர்
பின்னர் அறங்காவலர் ஏஆர். ஜெயமூர்த்தி, உதவி ஆணையர், ஆய்வாளர் மற்றும் கிராமப்பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்ற தலைவர் தேர்தலில் அதிக ஆதரவைப்பெற்று என்.எச்.வி. எஸ். கிருஷ்ணன் என்பவரை ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதைத்தொடர்ந்து கோவில் அறங்காவலர் குழுத்தலைவராக
தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிகழ்ச்சியில் வேம்பத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், வி.எம். சமயமுத்து, கல்லூரணி பொன்மலையான், கல்லூரணி துரை, பச்சேரி சமயத்துரை, அறங்காவலர் கார்த்திக், செம்புக்குட்டி, சந்தானம், தினேஷ், இராஜராஜன், அய்யனார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அறங்காவலர்கள் அனைவரும் தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர், கூட்டுறவுத்துறை அமைச்சர், அறநிலையத்துறை அமைச்சர் ஆகியோருக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்
கொள்வதாக தெரிவித்தனர்.