நாகர்கோவில் – செப் – 24,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அருகே 52 ஏக்கர் ஆரச்சர் நிலத்தை மீட்டு வீடு இல்லாத ஏழைகளுக்கு வழங்க கேட்டும் , அதை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்தும் இந்து தமிழர் கட்சி சார்பில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்து தமிழர் கட்சியின் மாவட்ட தலைவர் ராஜன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து தமிழ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு தமிழக அரசிற்க்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பண்டைய மன்னர்கள் காலத்தில் தூக்கு தண்டனை வழங்கும் போது தூக்கு தண்டனையை நிறவேற்ற பணியாற்றும் பணியாளர்களுக்கு மன்னரால் வழங்கப்பட்ட இடம் தான் ஆரச்சார் நிலம் இந்த 52 ஏக்கர் நிலத்தை . மன்னர்கள் காலத்திற்கு பின்னர் இந்த இடம் சம்பந்தபட்ட மாநில அரசுகளின் கட்டுபாட்டில் வந்து விட்டது அரசின் நிர்வாக சீர்கேட்டால் நாகர்கோவில் உள்ள இந்த ஆரச்சார் நிலங்களை அதிகாரிகள் உதவியுடன் தனி நபர்கள் கைவசம் வந்துள்ளது . தற்போது அந்த நிலங்களை தனி நபர்கள் வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்து வருகின்றனர். அதை தடுத்து நிலத்தை மீட்டு வீடு இல்லாத ஏழைகளுக்கு வழங்கவேண்டும் என கூறி தனி நபர்களிடம் இருந்து நிலத்தை மீட்காத தமிழக அரசை கண்டித்து நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்து தமிழர் கட்சி மாவட்டத்தலைவர் ராஜன் தலைமையில் இந்து தமிழர் கட்சியினர் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர். இதில் திருமடங்கள் திருக்கோவில் பாதுகாப்பு தலைவர் சங்கர் ஜீ, மாநில செயலாளர் ஈசான சிவம், மாவட்ட பொது செயலாளர் தில்லை நாதன், மாவட்ட அமைப்பு செயலாளர் அம்பிளி கண்ணன் வழக்கறிஞர் பிரிவு செந்தில்நாதன் மற்றும் அணி பிரிவு நிர்வாகிகள் சதிஷ், பிரசாத், ஆனந்தி , சுனிதா, தவசி , பிரதிப் , பெருமாள், லிதியா , மற்றும் இந்து தமிழ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு தமிழக அரசிற்க்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து தமிழர் கட்சியினரை நேசமணி நகர் காவல்நிலைய ஆய்வாளர் இசக்கி துறை தலைமையிலான போலீசார் கைது செய்து அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்திற்க்கு அழைத்து சென்றனர்.