தமிழ்நாடு மது போதை மறுவாழ்வு மையங்கள் சார்பில் மதுப்பழக்கம் மற்றும் போதை பொருள் பயன்பாடு குறித்து சமூக விழிப்புணர்வை ஏற்படுத்திய பாட்டல் ராதா படகுழுவினருக்கு பாராட்டு விழா….
சென்னை கோயம்பேடு அரும்பாக்கத்தில் உள்ள விஜய் பார்க் ஓட்டலில் தமிழ்நாடு மது போதை மறுவாழ்வு மையங்கள் சங்கத்தின் சார்பில் பாட்டல் ராதா படகுழுவினருக்கு பாராட்டு விழா வெகு சிறப்பாக நடைப்பெற்றது.
மதுப்பழக்கம் மற்றும் போதை பொருள் பயன்பாடு குறித்து சமூக விழிப்புணர்வை ஏற்படுத்திய அழகான படைப்பை உருவாக்கிய பாட்டல் ராதா
திரைபடக்குழுவினரை கவுவுரவிக்கும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாராட்டு விழாவிற்கு தமிழ்நாடு மது போதை மறுவாழ்வு மையத்தின் தலைவர் சீமான் தலைமை தாங்கினார்.
பாராட்டு விழாவில் பாட்டில் ராதா திரைப்படத்தின் எழுத்தாளர் மற்றும் இயக்குனர் தினகரன் சிவலிங்கம், கலை இயக்குனர் ராஜா, ஒளிபதிவாளர் ரூபேஷ் ஷாஜி மற்றும் துணை நடிகர்கள் அன்பரசி, அனிஷா உள்ளிட்ட ஏராளாமானோர் கலந்து கொண்டனர்.
பாராட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக ஐயங்கரன் ஆராய்ச்சி மையத்தின் நிறுவனர் எம்.எஸ். ஐயங்கரன், தமிழ்நாடு மது போதை மறுவாழ்வு மையங்களின் தலைவர் சீமான் தமிழ் வேந்தன், மாநில செயலாளர் பீனிக்ஸ் பாரி, மாநில பொருளாளர் லயன் டாக்டர் எஸ். முருகன் ஆகியோர் சிறந்த திரைப்படத்தை உருவாக்கிய பட குழுவினருக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தனர்.
விழாவில் கலந்து கொண்ட பாட்டில் ராதா திரைப்பட இயக்குனர் தினகரன் சிவலிங்கம் கூறும்போது, இந்தத் திரைப்படத்தை எடுக்கும்போது போதை மறுவாழ்வு மையத்தில் நடக்கும் சில தவறுகளை சுட்டி காட்டி இருந்ததால்
இந்த திரைப்படம் திரைக்கு வந்தால் போதை மறுவாழ்வு மையத்தினர் பிரச்சனை செய்வார்கள் என்று எதிர்பார்த்தேன் ஆனால் தற்போது எதார்த்தத்தை புரிந்து கொண்டு தமிழ்நாடு போதை மறுவாழ்வு மையங்கள் சார்பில் பாராட்டு விழா நடத்தியது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த படம் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய வெற்றியை ஈட்டவில்லையென்றாலும், இது போன்ற பாராட்டு விழாக்களே மிகப்பெரிய வெற்றியாக உணருகின்றேன் என்றார்.
தமிழ்நாடு மது போதை மறுவாழ்வு மையத்தின் ஆலோசனை குழு உறுப்பினர்கள் திருப்பூர் பிரபு, டாக்டர் ரிச்சர்ட், டாக்டர் ஜான் செல்வகுமார், டாக்டர் குமார், டாக்டர் பிரசாத் மற்றும் கோகுல கிருஷ்ணன் மற்றும் சங்கத்தின் உறுப்பினர்கள் என ஏராளாமானோர் கலந்து கொண்டனர்.