மார்ச்:17
திருப்பூர் மாவட்டம்மடத்துக்குளம் வட்டம் சங்கராமநல்லூர் பேரூராட்சி ருத்ரா பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. சங்கரமநல்லூர் பேரூராட்சி தலைவர் மல்லிகா கருப்புசாமி துணைத்தலைவர் பிரேமலதா உத்தம ராஜ் தலைமை ஆசிரியர் லிங்கேஸ்வரி பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். முன்னதாக மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடன போட்டி பேச்சு போட்டி கட்டுரை போட்டி கோல போட்டி நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.



