தருமபுரி மாவட்ட தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் . மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் மணிகண்டன் வரவேற்புரை ஆற்றினார் மாவட்ட பொருளாளர் புகழேந்தி நன்றி உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து தமிழக அரசே, தமிழக அரசே, திரும்ப பெறு, திரும்ப பெறு, செயல்படாத நல வாரியத்தை திரும்ப பெறு, திரும்ப பெறு. வஞ்சிக்காதே, வஞ்சிக்காதே, தாலுக்கா நிருபர்களை வஞ்சிக்காதே. வேண்டாம், வேண்டாம், அனைவருக்கும் பலன் அளிக்காத நல வாரியம் வேண்டாம், வேண்டாம். ஆகிய கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட, தாலுகா செய்தியாளர்கள், புகைப்பட கலைஞர்கள் கலந்து கொண்டனர்.



