அஞ்சுகிராமம் ஏப்-14
கிறிஸ்தவர்களில் தவக்கால நிகழ்வுகளில் முக்கியமான குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்பட்டது. மயிலாடியிலுள்ள அனைத்து கிறிஸ்தவ சபையினரும் கலந்துகொண்ட குருத்தோலை பவனி மயிலாடி சி.எஸ்.ஐ தேவாலயத்தில் வைத்து தொடங்கியது பவனியை சி.எஸ்ஐ சபை போதகர் கிறிஸ்துதாஸ் ஜெபித்து தொடங்கிவைத்தார். அதிதுதர் புனித மிக்கேல் திருத்தல பங்குதந்தை சைமன் தலமை தாங்கினார். சல்வேஷன் ஆர்மி தேவாலய பாஸ்டர் பிரேம் குமார், சி.எஸ்.ஐ உதவி பாஸ்டர் ஆபிரகாம் ஜஸ்டின் குமார் ஆகியோர் முன்னிலையில் மிஷன் விளை,ஜோசப் புரம், மயிலாடி பஸ் ஸ்டாண்ட் ஐங்ஷன் அண்ணாநகர், வழியாக சி.எஸ் ஐ தேவாலயத்தில் நிறைவடைந்தது பேரணியில் கலந்துகொண்டவர்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்தியபடி ”ஓசன்னா” பாடல் பாடி இயேசு எருசலேம் நகருக்கு வருவதை நினைவு கூரும் விதமாக நடைபெற்ற குருத்தோலை பவனியில் ரிங்கல் தெளிபே மேல்நிலைபள்ளி முன்னாள் தாளாளர் ஆல்வின், இந்நாள் தாளாளர் ஜேரோம், செல்வம், ஜோசப், ஐயப்பன், மாதவடியான், மற்றும் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்
அனைத்து கிறிஸ்தவ சபை குருத்தோலை பவனி

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics