வேலூர்=18
வேலூரில் இன்று மாலை அதிமுக சார்பில்
இலக்கு 2026 இலட்சிய மாநாடு என்ற பெயரில்
வேலூர் மண்டல மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர்,
2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக மிகப்பெரிய கூட்டணி அமைக்கும்
மத்திய அரசு திமுக அரசை பார்க்காமல்
கல்வி பாதிக்காமல் இருப்பதற்காக உடனடியாக நிதியை வழங்க வேண்டும்.
அதேபோல 100 நாள் வேலைக் திட்ட பணியாளர்களுக்கும் போதிய நிதியினை உடனடியாக வழங்க வேண்டும்
100 நாள் வேலை திட்டத்தில் ஏழையின் மக்கள் தான் பணி செய்கிறார்கள். எனவே அவர்களின் நலன் கருதி மத்திய அரசு நிதியினை உடனடியாக வழங்க வேண்டும்
தமிழகத்தில் இரு மொழி கொள்கைதான்
இது அதிமுகவின் கொள்கை. தமிழகத்திற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் மூலம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி கூடுதலான வருமானம் வருகிறது.
அப்படி வரும் பொழுது தமிழக அரசு எதற்கு கடன் வாங்க வேண்டும் நான்கு ஆண்டுகளில் மூன்று லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளனர் .யாருக்காக வாங்கினார்கள்?
தமிழகத்தில் எந்த ஒரு மிகப்பெரிய திட்டம் கொண்டுவரப்படவில்லை.
தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நிறைந்துள்ளது
தீய சக்தி திமுகவை விரைவில் வீட்டிற்கு அனுப்பப்படும்.
பாஜகவும் அதிமுகவும் ஒன்றாக அறிக்கை விடுகிறார்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார்
திமுக தான் பாஜகவுடன் காங்கிரஸ் கட்சியுடன் மாறி மாறி கூட்டணி வைத்தது.
முதலமைச்சர் மு க ஸ்டாலின் தன்னை அப்பா என்று கூறுவதாக சொல்கிறார்.
பாலியல் துன்பங்களுக்கு ஆளாக்கப்படும் பெண்கள் அப்பா அப்பா என கதறும் போது அப்பொழுது கேட்கவில்லையா?
திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது கோ பேக் மோடி என்று கூறினார்,ஆளுங்கட்சியாக வரும்பொழுது வெல்கம் மோடி என்று கூறுகிறார்.
திமுகவிற்கு எந்த கொள்கையும் இல்லை,
அதிமுகவுக்கு கொள்கை, வேறு கூட்டணி வேறு.
வரும் சட்டமன்ற தேர்தலில் வலிமையான கூட்டணி வைத்து வெற்றி பெறுவோம். 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்.
மத்திய அரசு நிதி வழங்கவில்லை வழங்கவில்லை என திமுக அரசு கூறுகிறது. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியினை எம்பிக்கள் மூலம் நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்து பெறவேண்டியது தானே
தமிழகத்தில் மின் கட்டணம் சொத்து வரி கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரிகள் அதிகரித்துள்ளது உணவுப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் கொலை கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்கள் அதிகரித்து காணப்படுகிறது
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 141 கொலைகள்
நடந்துள்ளது.
என்று எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.



