நாகர்கோவில் – அக் – 18,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் 53. வது ஆண்டு துவக்க விழா நேற்று கொண்டாடப்பட்டது. தமிழக முழுவதும் அதிமுகவினர் மறைந்த எம்ஜிஆர் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினர். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தம்பத்து கோணத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவப்படத்திற்கும் அ.இ.அ.தி.மு.க மாநில அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி. பச்சைமால் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் ஏழை எளிய மக்களுக்கு வேஷ்டி சேலை பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ். ஏ அசோகன், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய பெருந்தலைவர் அழகேசன்,
முன்னாள் கூட்டுறவு ஒன்றிய பெருந்தலைவர் கிருஷ்ணகுமார், கிருஷ்ணதாஸ், சந்தையடி பாலகிருஷ்ணன், ராமகிருஷ்ணன், ஆளூர் முருகன், வட்டச் செயலாளர் வைகுண்டராஜன் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.