சிவகங்கை மாவட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், 2025-ஆம் கல்வியாண்டிற்கான 12-ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு பயனுள்ள வகையில், தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அதிகம் படிப்புகள் குறித்த “என் கல்லூரி கனவு” உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், சிவகங்கை அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கத்தில் தொடங்கி வைத்து, மாணாக்கர்களுக்கு கையேடு, எழுதும் பொருள் போன்றவை உபகரணங்களை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.எஸ்.செல்வசுரபி , மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ம.ஆனந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.



