சங்கரன்கோவிலில் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கருக்கு நினைவஞ்சலி
தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரின் 68 வது நினைவு தின நிகழ்ச்சி சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து நடந்தது. நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமை வகித்து அண்ணல் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் யூஎஸ்டி சீனிவாசன், மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், மாவட்ட பொருளாளர் சரவணன்,மாவட்ட துணைச் செயலாளர்கள் மனோகரன், புனிதா, ஒன்றிய செயலாளர்கள் லாலா சங்கர பாண்டியன்,கடற்கரை, பெரியதுரை, கிறிஸ்டோபர், வெள்ளத்துரை, பால்ராஜ், ராமச்சந்திரன் ,நகர செயலாளர்கள் சங்கரன்கோவில் பிரகாஷ், புளியங்குடி அந்தோணிசாமி, பேரூர் கழக செயலாளர்கள் மாரிமுத்து குருசாமி ரூபி பாலசுப்ரமணியன், பொதுக்குழு உறுப்பினர் மகேஸ்வரி, மாவட்ட பிரதிநிதி செய்யது அலி, மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் பிச்சையா,மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் உதயகுமார், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் அப்பாஸ் அலி, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பசுபதி பாண்டியன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ஜலால், ஓய்வு பெற்ற தாசில்தார் சூரிய நாராயண மூர்த்தி, மின்வாரிய தொமுச திட்ட செயலாளர் மகாராஜன்,வீரா, வீரமணி, கட்டபொம்மன் சுந்தர் அஜய் மகேஷ்குமார் சண்முகையா யாசர், மூபின், கோதர், ஜெயக்குமார் ,பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



