மதுரை மாவட்டம் அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள் ஒட்டுமொத்த சாம்பியனையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இது தொடர்பாக கல்லூரி முதல்வர்(மு.கூபொ).முனைவர்.மு.அமுதா, தெரிவிக்கையில் மதுரை மண்டல அளவில் 2024-25 ஆண்டிற்கான விளையாட்டுப் போட்டிகள் விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த 10.09.2024 முதல் 13.09.2024 வரை நடைபெற்றது. அதில் மொத்தம் 8 பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர். இதில் மதுரை மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள் பங்கு பெற்று Kabadi Badminton,Ches,Throw Ball மற்றும் Volley Ball ஆகிய போட்டிகளில் முதலிடத்திலும் Kho-Kho,Table Tennis,Tennikoit,Ball Badminton,Carrom இரண்டாம் இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.
குறிப்பாக
ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் எங்கள் கல்லூரி மாணவிகள் பெற்றுள்ளனர். மாணவிகளுக்கு நல்ல பயிற்சியும் ஊக்கத்தையும்
அளித்த உடற்கல்வி இயக்கநர் ஏ.சந்திரசேகரனுக்கும் மற்றும் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்த வீராங்கனைகளுக்கும் மிகுந்த பாராட்டு எனத் தெரிவித்துள்ளார்.