தென்தாமரைகுளம்., அக்-27.
குமரி மாவட்டம் பொற்றையடி அருகே குளத்தில் மிதந்த ஆண் சடலம் மீட்க்கப்பட்டது.
பொற்றையடி அருகே பள்ளகுளம் அமைந்துள்ளது.இந்த குளத்தை
சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொது மக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்த குளத்தில் நேற்று முன்தினம் இரவு சுமார் 7 மணி அளவில் ஒரு ஆண் சடலம் மிதப்பதாக தென் தாமரைகுளம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது இதையடுத்து விரைந்து வந்த தென்தாமரை குளம் போலீசார் பள்ளகுளத்தில் கிடந்த ஆண் சடலத்தை கைபற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குளத்தில் கிடந்தது சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் சடலம். அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.அவர் தனது காலணிகளை கழற்றி படித்துறையில் வைத்து விட்டு குளிக்க குளத்தில் இறங்கும் போது தவறி விழுந்து இறந்தாரா? அல்லது குளிக்கும் போது இறந்தாரா எனவும் போலீசார் விசாரித்து வந்தனர்.இதில் குளத்தில் பிணமாக மிதந்தவர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது என போலிசார் தெரிவித்தனர்.