கன்னியாகுமரி மார் 10:
கன்னியாகுமரி கடற்கரையில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம். தொடர் விடுமுறை, அரசு விடுமுறை வார விடுமுறை உள்ளிட்ட நாட்களில் தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தளங்களில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதும்.அந்த வகையில், உலக புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகைத் தருவார்கள். இந்த நிலையில், ஞாயிறு விடுமுறையான நேற்று கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்துள்ளனர்.
அவர்கள் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கம கடற்கரை பகுதியில் திரண்டனர். ஆனால் மேகமூட்டம் காரணமாக சூரியன் உதயமாகும் காட்சி தெளிவாக தெரியவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.