தருமபுரி ரயில்வே நிலையம் அருகே தருமபுரி மாவட்ட சட்ட தூண்கள் அறக்கட்டளை தலைமை அலுவலகத்தில் மாநில, மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தருமபுரி மாவட்டத் தலைவர் பி.கே சிவா தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் அறக்கட்டளையின் முன்னேற்றம் பெறுவதற்கும் வளர்ச்சிக்கான வழிவகைகள் மற்றும் புதுமையான கருத்துக்களையும் வழங்கினர். இதில் மாநில தலைவர் குணசேகரன், மாநிலச் செயலாளர் பிலிப், மாநில பொருளாளர் காவேரி, அறங்காவலர்கள் குமரவேல், முத்து மற்றும் ரவி, லோகநாதன், பிரபு, ராமச்சந்திரன், நடராஜன், டைகர் சிவா மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.



