நாகர்கோவில் ஜூலை 23
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே சாலையில் வாகனங்கள் வந்து கொண்டிருக்கும்போது திடீரென குறுக்கே வந்த ஆடு. ஆட்டை காப்பாற்றும் முயற்சியில் லோடு ஆட்டோவை சாலையில் திடீரென ஓட்டுநர் நிறுத்தியதால் பின்னால் வந்த அரசு பேருந்து லோடு ஆட்டோவில் மோதி விபத்து.
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அடுத்த நன்றிக்குழி அருகே சாலையில் திடீரென வெள்ளாடு ஒன்று சாலையை கடக்க முற்பட்டபோது அவ்வழியாக பழங்களை ஏற்றி வந்த லோடு ஆட்டோ ஓட்டுநர் ஆட்டின் உயிரை காப்பாற்ற முற்பட்ட நிலையில் பிரேக் பிடித்து வண்டியை நிறுத்தினார். அந்த சமயம் பின்னால் வந்த அரசு பேருந்து திடீரென சாலையின் நடுவில் நின்ற லோடு ஆட்டோ மீது மோதியதும் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மேலும்இந்த விபத்தில் அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடி முற்றிலும் உடைந்து விழுந்தது. இதனால் லோடு ஆட்டோவில் இருந்த காய்கனிகள் அனைத்தும் சாலையில் சிதறி ஓடியது இந்த விபத்தில் ஆடு உட்பட யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை தற்போது அந்த சிசிடிவி கட்சியானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆட்டை காப்பாற்ற முயற்சித்து முடிவில் நஷ்டப்பட்ட லோடு ஆட்டோ ஓட்டுனரை பொதுமக்கள் பாராட்டி ஆறுதல் தெரிவித்தனர்.