கோவை, செப். 05 –
கோவை மாவட்டம் டாக்டர் ஆர்.வி கலை அறிவியல் கல்லூரியில் ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் வலியுறுத்தும் வகையில் ஓணம் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவை கல்லூரி முதல்வர் முனைவர் சி.என். ரூபா அவர்கள் தொடங்கி வைத்தார்.
அனைத்து மாணவ, மாணவிகளும் கல்லூரி வளாகத்தை வண்ணமயமாக அலங்கரித்து கேரள பாரம்பரிய உடை அணிந்து அத்தப்பூ கோலமிட்டு செண்டை மேளம் முழங்க மாபலிச்சக்ரவர்த்தியின் வேடமிட்டு அனைவருக்கும் வரவேற்பளித்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தி நடனமாடி ஓணம் பண்டிகையை கொண்டாடினர். இவ்விழாவில் கல்லூரியின் நிர்வாக மேலாளர் மனோகரன், துணை முதல்வர்கள், துறைத்தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



