ஈரோடு, செப். 1 –
ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம் தலைவர் வி.கே. ராஜமாணிக்கம் தலைமையில் ஈரோட்டில் நடந்தது. துணை தலைவர் வி. ராஜமாணிக்கம் வரவேற்றார். பொது செயலாளர் ரவிச்சந்திரன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் முருகானந்தம் நிதி நிலை அறிக்கை வாசித்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: ஜவுளி துறைக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பை 5 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக குறைக்க வேண்டும். புதிய தொழில் உரிமம் வரி விதிப்பை நீக்க வேண்டும். உணவு வகைகளுக்கும் தானிய வகைகளுக்கும் விதைகளுக்கும் ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும். தொழில் வணிக நிறுவனங்கள் வீடுகளுக்கு மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்.
மத்திய அரசு ஜிஎஸ்டி அதிகாரிகள் தொழில் நிறுவனங்களை எந்த வகையிலும் தொந்தரவு செய்வது இல்லை. ஆனால் தமிழக ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் தொழிலை நசுக்கி கொண்டு உள்ளனர். இந்த நிலை தொடர்ந்தால் அனைத்து சங்கங்களும் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்துவது மேற்கண்ட தீர்மானங்கள் உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.



