திருப்பூர், ஆக. 30
திருப்பூர் போயம்பாளையம் மாநகராட்சி 7-வது வார்டு திருமூர்த்தி நகர் 3-வது தெருவில் வசிக்கும் பொது மக்களின் வேண்டுகோளுக்கிணங்க தெரு விளக்கு கடந்த ஒரு வருடமாக செயல்படாமல் இருப்பதை கவுன்சிலரிடம் பல முறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்காததால் வார்டு தலைவி சாந்தி, திருப்பூர் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி ஆஷா அவர்களிடம் தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் மின்சார வாரிய அதிகாரிகளை அழைத்து பேசி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அங்கு தெரு விளக்கு எரிந்ததை தொடர்ந்து. மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.



