திருப்பூர், ஆக. 27 –
திருப்பூரில் பின்னலாடை உற்பத்திக்கு முக்கியமான தையல் இயந்திரம் தற்போது செயற்கை அறிதிறன் தொழில்நுட்ப முறையில் உருவாக்கப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளது. ஓவர்லாக், பேட்லாக், சிங்கர் போன்ற பல வகையான தையல் இயந்திரங்களை கொண்டு திருப்பூரில் பனியன், ஜட்டி போன்ற பின்னலாடைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
தற்போது காலத்திற்கேற்ப ஏ.ஐ என்பது அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறது. அதேபோல் திருப்பூரில் பின்னலாடை இயந்திரங்கள் தற்போது ஏ.ஐ தொழில் நுட்பத்திற்கு மாறி வருகிறது. தற்போது ஏ.ஐ செகண்ட் ஜெனரேஷன் சிங்கர் மிஷின் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ஆயில் ஃப்ரீ டெக்னாலஜியுடன் 2.2 மில்லியன் டேட்டா பொருத்தப்பட்டு பழைய டெக்னாலஜியில் இருந்த சிப்பை காட்டிலும் பத்து மடங்கு செயல் திறன் கொண்டதாகவும் உள்ளது. இந்த மிஷின் துணிகளுக்கு ஏற்றது.
போல் தன்னைத்தானே அட்ஜஸ்ட்மெண்ட் செய்து தைக்கும் திறன் கொண்டது. இதனால் ஒவ்வொரு முறையும் அளவை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. இதனால் அதிக அளவிலான உற்பத்தி செய்ய முடியும் எனவும், இயந்திரத்தில் உள்ள நூல் உபயோகிக்கும் போது ஒருபோதும் அறுந்து போகாததால் இதில் அனைத்து விதமான துணிகளையும் தைக்க முடியும். இதை இந்தியாவில் முதல்முறையாக திருப்பூரில் அறிமுகப்படுத்தி உள்ளதாக தெரிவித்தனர்.



