புதுக்கடை, ஆக. 26 –
புதுக்கடை அருகே வேட்டமங்கலம் இளைஞர் நற்பணி மன்ற ஆண்டு விழா நடந்தது. காலையில் புதுக்கடை காவல் உதவி ஆய்வாளர் கார்த்திக் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். தொடர்ந்து மாலையில் மன்ற விழா பொதுக்கூட்டமானது தலைவர் கிறிஸ்துதாஸ் தலைமையில் நடந்தது. ஆசிரியை பிரமிளா வரவேற்றார்.
பைங்குளம் ஊராட்சி முன்னாள் தலைவர் விஜயராணி, என்.சி.சி. அதிகாரி அனில்குமார்,
விஜயன், எழுத்தாளர் குமரி தோழன் பேசினர். மழலைசெல்வங்கள் ஆர்லின் வில்சன் மற்றும் கார்த்திகா விழிப்புணர்வு பாடல்களை பாட மன்ற தலைவர் திரு. கிறிஸ்துதாஸ் 2024-2025 ஆம் ஆண்டில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்வில் பயின்ற மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினார்.
முடிவில் மன்ற சட்ட ஆலோசகர் டென்னீஸ் நன்றியுரையாற்றினார். சமபந்தி விருந்தில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இவ்விழாவில் மன்ற நிர்வாகிகள் மன்ற உறுப்பினர்கள் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



