திண்டுக்கல், ஆகஸ்ட் 22 –
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் பூத் கமிட்டி அமைக்க ஆலோசனை கூட்டம் மாண்புமிகு முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி சேகர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகுமார், நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர் யாகப்பன், துணை ஒன்றிய செயலாளர் சேகர், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் மோகன்ராஜ், வத்தலகுண்டு ஒன்றிய செயலாளர் பீர் முகமது மற்றும் கழகத் தொண்டர்களும் இந்த பூத் கமிட்டியில் கலந்து கொண்டு கட்சி செல்லும் வழியே தொண்டர்களும் அவ்வழி பாடுபடுவோம் என்று அனைவரும் ஒத்துழைத்து இந்த தேர்தலில் வெற்றி கொடியை நாட்டுவோம் அரங்கம் அதிர ஓசைகள் எழுப்பி முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் சமர்ப்பித்தனர். விழாவின் முடிவில் கழகத் தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் முட்டை பிரியாணி, சிக்கன் பிரியாணி அனைத்தும் வழங்கப்பட்டது. கட்சி தொண்டர்கள் மகிழ்ச்சி.



