மயிலாடுதுறை, ஆக. 20 –
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மார்க்கோனி மந்திராலயா நகரில் புதிதாக வள்ளி தெய்வசேனா சமேத வேல்முருகன் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. ஆலயத்தின் கும்பாபிஷேகம் 21-ம் தேதி காலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நான்கு கால யாகசாலை பூஜைகள் துவங்கின.
புனித நீர் கலசங்களில் நிரப்பப்பட்டு யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு மந்திரங்கள் முழங்க வேள்வி செய்யப்பட்டு முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தருமபுரம் ஆதீன 27-வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் யாகசாலை பூஜைகளை துவக்கி வைத்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.



