கோவை, ஆகஸ்ட் 12 –
கோவை மேட்டுபாளையம் சாலை நரசிம்மநாய்க்கன் பாளையத்தில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை பயிற்சி மையத்தில் சிறுதுளி நிறுவனம் நீர் பாதுகாப்பு மற்றும் மரக்கன்றுகள் நடல் ஆகிய மேம்பாட்டுப் பணிகளில் தொடர்ந்து முன்னணி பங்காற்றி வருகிறது. 2019-ம் ஆண்டு முதல் மத்திய ஆயுதப்படையுடன் இணைந்து சிறுதுளி நிறுவனம் 53,500 மரக்கன்றுகள் நட்டதோடு 5 மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் மற்றும் 2 கூரையடித் தொட்டிகள் அமைத்துள்ளது. இந்த பசுமை பயணத்தின் அடுத்த கட்டமாக சிறுதுளி, HCL அறக்கட்டளையின் 49-வது ஆண்டு விழாவை முன்னிட்டு 5000 மரங்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை மத்திய ரிசர்வ் போலீஸ் படை மையத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஸ்ரீ, ஷிஷ் ராம் துணை தளபதி ஷிஷ் ராம், CRPF. HCL நிறுவனத்தின் இணை இயக்குனர் சிமி சூரி, இணை மேலாளர்கள் டாக்டர் சுகந்தா, ஷாம் சுந்தர் கலந்து கொண்டனர். சிறுதுளி நிறுவனத்தில் இருந்து வழிகாட்டுதல் குழு உறுப்பினர் V. சந்திரசேகர் சிறுதுளி அபெக்ஸ் உறுப்பினர்கள் மற்றும் சிறுதுளி ஊழியர்கள் பி.எஸ்.ஜி. ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, எஸ்.என்.எஸ் தொழில்நுட்பக் கல்லூரி, சி.எம்.எஸ் அறிவியல் மற்றும் வணிகக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் இருந்து 240 ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சமூக நலப்பங்காற்ற இந்த மரம் நடுதல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
மொத்தம் 300 பேர் HCL பவுண்டேசன், சிறுதுளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்று இம்மரநடவு முயற்சிக்கு உறுதுணையாக இருந்தனர். இந்த மாபெரும் பசுமை இயக்கம், சமூக பங்கேற்பின் முக்கியத்துவத்தையும் நிலத்தடி நீர்வளங்களை மீட்டெடுக்கும் முக்கியமான கட்டத்தையும் அடையாளமாக கொண்டது. நிலத்தடி நீரைச் சீர்படுத்தவும், நிலம் மற்றும் நீரை சீராகப் பயன்படுத்தவும், உயிரினங்களுக்கு உகந்த இடவசதிகளை உருவாக்கவும் இது ஒரு வழிகாட்டி நிகழ்வாக அமைந்தது.



