கோவை ஆகஸ்ட்: 08
கோவை மாவட்டம் சுந்தராபுரம் மஹாலில் பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 3242 சி மாவட்ட ஆளுநர் ராஜசேகர் விழாவை தலைமை தாங்கி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இதைத்தொடர்ந்து இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவரும் முன்னாள் மாவட்ட ஆளுநருமான டாக்டர் பழனிச்சாமி புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து வைத்தார்.
நிகழ்ச்சியில் கவுரவ அழைப்பாளர்களாக முன்னாள் ஆளுநர்கள் நித்யானந்தம், டாக்டர் சாரதாமணி பழனிசாமி, டாக்டர் ஜீவானந்தம், கருணாநிதி மற்றும் முதல் துணை நிலை ஆளுநர் ராஜசேகர் இரண்டாம் துணை ஆளுநர் சூரி நந்தகோபால் மற்றும் ஜி.எல்.டி ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர், மாவட்ட அமைச்சரவை செயலாளர் ரவிசங்கர்
ஆகியோர் சேவை திட்டங்களை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்கள்.
இதில் பெண்களை தொழில் முனைவோர்கள் ஆக்கும் வகையில் இலவச தையல் இயந்திரம் மற்றும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மாதம் தோறும் கல்வி உதவி தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதே போல தற்போது செயல்படுத்தி வரும் பல்வேறு சமூக நல திட்டங்களான குழந்தைகள் மருத்துவம், கண் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு உதவி தொகை வழங்குவது, கல்வி உதவி தொகை வழங்குவது, உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு செய்வது, கை, கால்களை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கை, கால்கள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சேவை திட்டங்களை அனைத்து சங்க உறுப்பினர்களுடன் இணைந்து தொடர்ந்து சிறப்பாக செய்வது என முடிவு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 5-ம் தேதி பிறந்த நாள் கொண்டாடும் ஜி.எஸ்.டி. ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமாருக்கு அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து மேடையில் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது.விழாவில்,சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.