தேனி, ஆக. 3 –
தமிழகம் முழுவதும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காணொளி காட்சி வாயிலாக நேற்று முதல்வர் தொடங்கி வைத்த நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் இந்த நிகழ்ச்சி துவக்கப்பட்டு முகாம் நடைபெற்றது. முகாமின் வரவேற்பு பேனரில் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினரின் படம் மட்டும் இருந்ததை பார்த்து கோபத்தோடு மேடைக்கு வந்த தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கத்தமிழ் செல்வன்.
புரோட்டாகால்படி ,தேனி நாடாளுமன்ற உறுப்பினரின் படம் வரவேற்பு பேனரில் எதற்கு இல்லை என கேள்வி எழுப்பியதோடு மேடையிலேயே சட்டமன்ற உறுப்பினர் மகாராஜனை திட்டினார்.
தொடர்ந்து கோபத்தில் அமர்ந்திருந்த ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் நலத்திட்ட உதவிகள் வழங்கும்போது நான்தான் வழங்குவேன் என நலத்திட்ட உதவி வழங்கும் அட்டையை நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வனின் கையில் கொடுக்காமல், பிடுங்கியதோடு தன்னை ஏன் திட்ட வேண்டும் என்று கூறி தங்க தமிழ்செல்வனிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்பட்டார். பதிலுக்கு தங்க தமிழ்செல்வமும் கடும் வாக்குவாதல் மேடையிலேயே பரபரப்பு ஏற்பட்டு.இருவரும் சண்டையிட்டுக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது.இதையடுத்து துவக்க விழா நிகழ்ச்சியில் சலசலப்பு ஏற்பட்டது. பின்பு அதிகாரிகள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். பின்பு விழா தொடர்ந்து மாலைஆறு மணி வரை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.