மதுரை, ஜூன் 21 –
திருநகர் முத்து தேவர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 1250 பேர் திருநகர் அண்ணா பூங்கா விளையாட்டு மைதானத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு
மாபெரும் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. போரில்லா உலகை முன்னிலைப்படுத்துவோம் என்பதை கருத்தில் கொண்டு உலகில் அன்பும் அரவணைப்பு சகோதரத்துவ நிகழ்வுக்கு வழிவகுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக யோகாசனங்களை செய்தனர். இந்த விழாவிற்கு தலைமை ஆசிரியர் பி. ஆனந்த் தலைமையில் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் இணைந்து பள்ளித் தலைவர் சரவணன், பள்ளிச் செயலாளர் கண்ணன், பள்ளி இயக்குனர் முனைவர் ப. நடன குருநாதன் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.