ராமநாதபுரம், ஜுன் 21 –
இராமநாதபுரம் அதிமுக மாவட்ட கழகம் சார்பில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய DMK IT Wing மாநில செயலாளர் டி.ஆர்.பி ராஜா மற்றும் அதன் நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக அனைத்து தரப்பு நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வளாகத்தில் பேரணியாக சென்று மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுக்க திரண்டு வந்து இருந்தனர். எஸ்.பி. சற்று நழுவி புகார் மனுவை கூடுதல் எஸ்.பி. பெறும் வகையில் திசை திருப்ப அதிமுக நிர்வாகிகள் இது எதிர்பார்த்ததுதான் இங்கு நியாயம் கிடைக்காது என்று சட்ட ரீதியாக புகார் மனுவை மாவட்ட கழகச் செயலாளர் முனியசாமி மற்றும் கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா ஆகியோர் தலைமையில் வழங்கினர். அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் விருதுநகர் மண்டல செயலாளர் சரவணகுமார் மற்றும் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் நாகராஜன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு சார்பில் கருணாகரன் மற்றும் மாணவரணி சார்பில் கழக மாணவரணி துணைச்செயலாளர், செந்தில் குமார் ஆகியோரால் தனித்தனியே புகார் மனு அளிக்கப்பட்டது. இதில் கழக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் நிறைகுளத்தான் கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் முனியசாமி, கழக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர்கள் சாமிநாதன், ரத்தினம், மாவட்ட கழக இணைச் செயலாளர் கவிதா சசிகுமார், பொருளாளர் குமரவேல், ஒன்றிய கழகச் செயலாளர் மருது பாண்டியன், லோகிதாசன், நகர் கழகச் செயலாளர்கள் பால்பாண்டியன், சார்பு அணி மாவட்டச் செயலாளர் ஸ்டாலின் (எ) ஜெயச்சந்திரன், உதுமான் அலி மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள், வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள், மாணவரணி நிர்வாகிகள் மற்றும் கழகத்தின் பல்வேறு நிலைகளில் பொறுப்பு வகிக்கும் நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.