ஊத்தங்கரை,ஜூன் 21 –
ஊத்தங்கரை வழக்கறிஞர்கள் சங்கங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை நீதிமன்ற நுழைவாயில் முன்பு வழக்கறிஞர்கள் சங்கங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில்
தமிழகத்தில் வழக்கறிஞர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது, கொலை செய்வது வாடிக்கையாக உள்ளது. திருவண்ணாமலை வழக்கறிஞர் காமராஜ் அவர்களை வெட்டிக் கொலை செய்யப்பட்டதை கண்டித்து வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றிட வற்புறுத்தி ஊத்தங்கரை நீதிமன்ற நுழைவாயில் முன்பு போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்தில் சங்கத் தலைவர் வழக்கறிஞர் மூர்த்தி, சங்க செயலாளர் வழக்கறிஞர் வஜ்ஜிரவேல், துணை தலைவர்கள் பிரபாவதி, லட்சுமணன், கார்த்திகேயன், பாலச்சந்தர், மூத்த வழக்கறிஞர்கள் கணநாதன், சந்திரசேகரன் மற்றும் துணை செயலாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் வெங்கடேஷ்குமார் மாதேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.