ஈரோடு ஜூன் 4
ஈரோடு பழைய பாளையத்தில் ஆகாஷ் எஜூகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் என்ற கல்வி நிறுவனம் செயல்படுத்துகிறது.
இந்த கல்வி நிறுவனத்தில் ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இந்த கல்வி நிறுவனத்தில் படித்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த நிதின், சுஹிதா என்ற 2 மாணவர்கள் ஜேஇஇ அட்வான்ஸ் 2025 தேர்வில் ஏஐஆர் 1125 மற்றும் 4939 என்ற முறையில் சிறந்த தர வரிசைகளை பெற்றுள்ளனர்.
இது பற்றி ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட்டின் தலைமை கல்வி வணிக தலைவர் தீரஜ் மிஷ்ரா கூறியதாவது
இந்த அற்புதமான சாதனை மாணவர்களின் அர்ப்பணிப்பு கடுமையான உழைப்பு மற்றும் ஆகாஷ் எஜூகேஷனல் சர்வீஸ் லிமிடெட்டின் நிபுண ஆசிரியர்கள் மற்றும் விரிவான பாடத்திட்டத்தின் வலுவான கல்வி ஆதரவை வெளிப்படுத்துகிறது.
உலகளவில் மிகக் கடுமையான நுழைவுத் தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் ஜேஇஇ அட்வான்ஸ்டு ஆழமான கருத்துக்களைப் புரிந்து கொள்ளுதல் மற்றும் வலுவான பிரச்சினை தீர்க்கும் திறன்களைப் பெற்றிருப்பதை தேவைப்படுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட்டின் மூத்த உதவி இயக்குநர் சஞ்சய் காந்தி கூறியதாவது: இந்த முடிவுகள் மாணவர்களுக்கு வழங்கும் கல்வி கடுமை மற்றும் ஒழுங்கின் வெளிப்பாடாகும். மற்றும் ஐஐடி களிலும் அடுத்த கட்ட வாழ்விலும் மாணவர்க ளுக்கு மிக சிறந்த வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
ஜெஇஇ அட்வான்ஸ்டு தேர்வு ஆண்டுதோறும் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. ஜேஇஇ மெயின்ஸ் தேர்வு இந்தியாவின் பல தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள் (நிட்) மற்றும் மற்ற மைய உதவியுடன் நடத்தப்படும் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வு இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி) சேர்க்கைக்கு தேவையாகக கருதப்படுகிறது.
ஆகாஷ் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பொருத்தமான பல வகுப்புத் திட்டங்களின் மூலம் விரிவான ஐஐடி -ஜெஇஇ பயிற்சியை வழங்குகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.



