திருப்புவனம்
மே 29
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புதூர் பகுதியில் கிருஷ்ணன் கோவில் தெருவில் வசித்து வருபவர்கள் அங்குசாமி மற்றும் ராமலட்சுமி தம்பதியினர் இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு மூன்று பெண் குழந்தை உள்ளது. முதல் பெண் பரமேஸ்வரி (வயது 22)கடந்த 2 வருடத்திற்கு முன்பு திருமணமாகி கணவன் விபத்தில் இழந்து விடவே இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தையுடன் பெற்றோர்களுடன் வசித்து வருகிறார்.
மற்ற இரண்டு தங்கைகள் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்,
இந்நிலையில் வழக்கம் போல் பெற்றோர்கள் வேலைக்குச் சென்றனர். விடுமுறையில் வீட்டிலிருந்த அந்த இரண்டு பள்ளி மாணவிகளும் வீட்டில் தோசை சுடுவதற்காக கேஸ் அடுப்பை ஆன் செய்து லைட்டரை பற்ற வைக்க முயற்சிக்கும் பொழுது கேசில் இருந்து அடுப்புக்கு செல்லும் அந்த டியூப்பில் கேஸ் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இரண்டு குழந்தைகளும் கேஸ் அடுப்பு ஆப் செய்துவிட்டு சிலிண்டரை ஆப் செய்யாமல் உடனே வீட்டை விட்டு ஓடி வந்துள்ளனர்,
தீ எறிவது நிற்கவில்லை உடனடியாக பயத்தில் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தவர்கள், கண் இமைக்கும் நேரத்தில் வசித்து வந்த ஓட்டு வீடு முழுவதும்
தீப்பற்றி மலமலவென்று எறிய ஆரம்பித்துள்ளது.
அருகில் இருந்தவர்கள் 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மானாமதுரை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தீ அணைப்பு துறையினர் வருவதற்கு அரை மணி நேரத்திற்கு மேல் ஆகும் என்பதால். அருகில் இருந்தவர்கள் தீயை போராடி அனைத்து உள்ளனர்.
இந்த தீ விபத்தில் விதவையாக இருந்த தனது மூத்த பெண்ணிற்கு மறு திருமணம் செய்து வைப்பதற்காக வீட்டில் வைத்திருந்த 15 பவுன் நகை மற்றும் 3 லட்சம் ரூபாய் பணமும் தீயில் கருகி சேதமானதாக கூறப்படுகிறது.
மேலும்
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்து வைத்த நகை பணம் தீயில் கருகி சேதமாதை தாங்க முடியாமல் பார்த்து பார்த்து மூன்று குழந்தைகளும் கதறி அழும் காட்சி நெஞ்சை உருக்கும் விதமாக இருந்தது.
இது குறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில் இங்கு அருகில் தீயணைப்பு நிலையம் இருந்திருந்தால் அவர்கள் வேகமாக வந்து இந்த தீயை அணைத்திருக்க முடியும் இந்த குழந்தைகளின் நகைகளையும் பணத்தையும் காப்பாற்றி இருக்கலாம் மானாமதுரையில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதால்
இங்கு வர தாமதம் ஆகிவிட்டது இதனால் இவ்வளவு பெரிய விபத்து ஏற்பட்டு உள்ளது நாங்கள் பலமுறை இங்கு ஒரு தீயணைப்பு நிலையம் வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறோம், தமிழக முதல்வர் கவனத்தில் எடுத்துக் கொண்டு இப்பகுதியில் ஒரு தீயணைப்பு நிலையம் அமைத்து தர வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கு அரசு நிவாரணம் தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.