கன்னியாகுமரி மே 30
கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு இன்று முதல் மூன்று நாட்கள் சுற்றுலா படகுகள் இயக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் 5 அடுக்கு பாதுகாப்புடன் 3000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி முழுவதும் போலீசாரின் முழு கட்டுப்பாட்டு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
18-வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டமாக நடத்தப்படுகிறது. ஆறு கட்டம் தேர்தல் முடிவடைந்த நிலையில் ஏழாவது கட்ட தேர்தல் வரும் 1-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக கன்னியாகுமரிக்கு வருகை தருகிறார். கன்னியாகுமரிக்கு வரும் அவர் குமரி கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் உள்ள தியான நினைவு மண்டபத்தில் தியானம் செய்ய உள்ளார். இன்று (30-ம் தேதி) உத்ரபிரதேசத்தில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வரும் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிற்பகல் கன்னியாகுமரி வந்து சேர்கிறார். அங்கிருந்து தனி படகில் கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு சென்று சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிடுகிறார். அங்குள்ள ஸ்ரீபாத மண்டபத்தில் பாறையில் பதிந்துள்ள பகவதி அம்மன் கால் பதித்த இடத்தில் மலர் வைத்து வணங்குகிறார். அதனை தொடர்ந்து 31-ம் தேதி முழுக்க முழுக்க தியானத்தில் தனிமையில் இருக்க உள்ளார். வரும் ஒன்றாம் தேதி வரை கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் அவர் தங்கி இருக்கிறார். ஒன்றாம் தேதி தியானத்தை முடித்துவிட்டு விவேகானந்தர் நினைவு மண்ட பாறையில் இருந்து வெளியே வரும் அவர் படகு மூலம் கரைந்து வந்து சேர்ந்து ஒன்றாம் தேதி பிற்பகல் கன்னியகுமரியில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்வதாக அவருடைய பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளது. அவருடைய வருகை மற்றும் தியான நிகழ்ச்சியை முன்னிட்டு கன்னியாகுமரி முழுவதும் போலீசாரின் முழு கட்டுப்பாட்டு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 5 அடுக்கு பாதுகாப்புகளுடன் 3000 போலீசார் நேற்று மாலை முதல் குவிக்கப்பட்டு உள்ளனர் பிரதமர் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் சுற்றுலா படகுகளின் இயக்கம் இன்று முதல் 1-ம் தேதி வரை மூன்று நாட்கள் ரத்து செய்யப்படுவதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.