கோவை மதுக்கரை பகுதி நைட்டிங்கேள் செவிலியர் கல்லூரியில் நடைபெற்ற உலக செவிலியர் தினவிழாவில் இந்திய இராணுவத்தில் செவிலியர் சேவை பிரிவில் துணை இயக்குநராக பணியாற்றியவரும் ஜனாதிபதி விருது பெற்றவருமான இக்னிடெஸ் டெலஸ் ப்ளோரா சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஆசிரியர்கள் மற்றும் செவிலியர் மாணவிகளுக்கு கேடயங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கு நைட்டிங்கேல் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் மனோகரன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து அனைவரையும் வரவேற்று பேசினார்.
செயலாளர்கள் ராஜீவ் சஞ்சய் ஆகியோர் நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தனர்.
விழாவில் பேசிய இக்னிடெஸ் டெலஸ் ப்ளோரா, ராணுவத்தில் தான் செவிலியாராக பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்துகொண்டதுடன், மாணவிகளுக்கு அறிவுரைகளையும் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,செவிலியர் பணி என்பது கடுமையான பணி எனவும் இந்தியாவில் குறைவான செவிலியர்களே உள்ளனர் எனவும் கூறினார்.
தற்போது செவிலியருக்காக படிக்கும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தான் இராணுவத்தில் இணையும் போது தான் ஒருவர் மட்டுமே தமிழகத்தை சேர்ந்தவர் எனவும் 29 வட இந்தியர்கள் மற்றவர்கள் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனவும் கூறியதுடன், தற்போது கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் குறைந்துள்ளதாகவும் வேறு துறைக்கு செல்கிறார்கள் அல்லது நர்சிங் படித்துவிட்டு வெளிநாட்டுக்கு செல்கிறார்கள் எனவும் கூறினார்.
அதே சமயத்தில் வட இந்தியர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்திருப்பதாகவும் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர்கள் டாக்டர் சோமியா ஜூலியட், டாக்டர். மும்தாஜ் டாக்டர் இந்துலதா, டாக்டர் ராஜன், பொன்னம்மாள், டாக்டர் அண்ணம், துணை முதல்வர்கள் துர்கா,முனல் சிங் மற்றும் டாக்டர். திலகவதி, ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.