By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆட்சியரிடம் மனுக் கொடுத்த அறக்கட்டளை நிர்வாகி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > ஆட்சியரிடம் மனுக் கொடுத்த அறக்கட்டளை நிர்வாகி
Blogசிவகங்கைமாவட்டம்

ஆட்சியரிடம் மனுக் கொடுத்த அறக்கட்டளை நிர்வாகி

Last updated: May 14, 2025 12:44 pm
May 14, 2025 13 Views
Share
SHARE

சிவகங்கை மே:13

சிவகங்கை மாவட்டம் கண்டிப்பட்டியைச் சேர்ந்தவர் கதிரவன் . இவர் எம் .ஜி. ராமச்சந்திரன் பெயரின் அறக்கட்டளையை நடத்தி வருகிறார் . இவர் நேற்று மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது :

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய பழனியம்மாள் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாபன் , உதவிப் பொறியாளர் ராஜா ஆகியோர் டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்டது சம்பந்தமாக கொடுத்த ஊழல் புகார்கள் மீது மேல்அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் நான் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் ரிட் மனு தாக்கல் செய்தேன் .

அதன் பின்பு குற்றம் சுமத்தப்பட்ட மூன்று அதிகாரிகள் மீதும் துறை ரீதியான 17 ( b ) ன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக எனக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது . மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை தணிக்கை பிரிவு மூலம் கடந்த 2020 – 21 இல் முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டு தமிழ்நாடு குடிமைப் பணிகள் ஒழுங்கு மற்றும் மேல்முறையீட்டு விதி 17 (b ) ன் படி மாவட்ட ஆட்சியரால் வட்டார வளர்ச்சி அலுவலர் பழனியம்மாளுக்கு 23 . 12. 2023 ல் குற்றச்சாட்டு குறிபாணை வழங்கப்பட்டு அதற்குரிய நடவடிக்கையை விரைந்து எடுக்காமல் அவையும் நிலுவையில் இருந்து வருகிறது .

இதன் பின்பு பழனியம்மாள் அவர்கள் கண்ணங்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்டார் . கண்ணங்குடியில் இவர் தேர்தலில் முறைகேடுகள் செய்ததாக லஞ்ச ஒழிப்பு துறை மூலம் வழக்கும் பதிவு செய்யப்பட்டு அவை நாளிதழ்களிலும் செய்தியாக வெளிவந்தது . இந்நிலையில் அதே பழனியம்மாளை தனது சொந்த ஊரான தேவகோட்டையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மீண்டும் வட்டார வளர்ச்சி அலுவலராக பணி நியமனம் செய்திருப்பது வேதனையை தருகிறது .

எனவே இவர் மீது ஏற்கனவே குற்றச்சாட்டு குறிப்பானை விசாரணையில் இருக்கும் போது. இவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்கும் போது சொந்த ஊரிலேயே பணி நியமனம் செய்திருப்பதால் இன்னும் அதிகமான ஊழல் குற்றச்சாட்டுகளில் இவர் ஈடுபட வாய்ப்பு இருக்கிறது .

காசோலையில் கையொப்பமிடும் அதிகாரம் மீண்டும் கிடைத்து இருப்பதால் குற்றச்சாட்டுகள் அதிகமாகவே தொடரும். எனவே இவரின் பணி நியமனம் , மற்றும் பதவி உயர்வு ஆகியவை ஏற்புடையதுதானா ? எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தார்.

You Might Also Like

திருப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலை நினைவு நாள் அனுசரிப்பு

காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளி பவளவிழா ஆண்டு நிகழ்ச்சி

மார்த்தாண்டம் அருகே ஓடும் பஸ்ஸில் பெண்ணின் நகை திருட்டு

தக்கலை அருகே நடந்து சென்று 3 பெண்கள் மீது கார் மோதல்

எடப்பாடியாருக்குஒன்றிய செயலாளர் ஆர் ஜி மருதுபாண்டியன் தங்கத்தினால் ஆன ஒன்றரை அடி முருகன் சிலை வழங்கி சபதம் ஏற்றார்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கனஂனியாகுமரி

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நான்கு பேர் கைது

April 19, 2025 19 Views
மக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம்
இ.எஸ்.ஐ. நிறுவனம் வழங்கிய ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை
வீர வாஞ்சிநாதன் 139-வது பிறந்தநாள் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் அரசு விழாவாக கொண்டாட்டம்
விவசாயிகள் உடனான கலந்து ஆலோசனை கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?