தேசிய அளவிலான தேக்வாண்டோ போட்டி கடந்த
மாதம் 25-ஆம் தேதி முதல் 29 -ஆம் தேதி வரை மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரில் நடைபெற்றது. இதில் தமிழக அணி சார்பில் சின்னாளப்பட்டி ராஜன் உள்விளையாட்டு ‘ அரங்கில் பயிற்சி பெற்ற 8 மாணவர்கள் பல்வேறு எடைப் பிரிவில் கலந்து கொண்டனர். இதில் 87 கிலோ சீனியர் பிரிவில் நவீன்குமார் என்ற மாணவர் 2-ஆம் இடம்பிடித்து வெள்ளிப்பதக்கம் பெற்றார்.38 கிலோ சப-ஜூனியர் பிரிவில் நகுலன், 47 கிலோ பிரிவில் தியா ஆகியோர் 3-ஆம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தைத் தட்டிச்சென்றனர். தேசிய அளவில் தேக்வாண்டோ போட்டியில் சாதனை படைத்து தமிழகத்துக்கு பெருமை சேர்த்த 3 தேக்வாண்டோ வீரர்களுக்கு திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சர்வதேச நடுவரும், பயிற்சியாளருமான மாஸ்டர். எம். பிரேம்நாத், மற்றும் பெற்றோர்கள் சால்வை அணிவித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
தேசிய தேக்வாண்டோ போட்டியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு சின்னாளப்பட்டி ராஜன்உள்விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா



