சென்னை, ஏப். 29
சென்னை வண்டலூரை அடுத்த தாகூர் எஞ்சினீயரிங் கல்லூரியின் 22 மற்றும் 23 வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் கல்லூரியின் முதல்வர் ஆர்.ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவில் நாகலாந்து மாநில நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியின் இயக்குனர், பேராசிரியர், டாக்டர் இளைய பெருமாள் பட்டமளிப்பு விழா பேருரை நிகழ்த்தி, பல்கலைக்கழக தரவரிசையில் இடம் பிடித்த மாணவ-மாணவியர், 310 பேருக்கு பட்டங்களை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில்,
அனைத்து துறைகளிலும் தொழில்நுட்ப வளர்ச்சி தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில், மாணவர்கள் தங்கள் தொழில்நுட்பக் கல்வி மற்றும் திறமைகளை தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும். வாய்ப்புக்கள் கிடைப்பதே அரிதாகி விட்ட இன்றைய சூழலில், கிடைத்த வாய்ப்புகளை மாணவர்கள் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வேலை வாய்ப்புகளை பெறுவதில் ஆர்வம் காட்டும் இளம் பொறியாளர்கள் அதேவேளையில், சொந்த தொழில் தொடங்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.



