கருங்கல், ஏப்- 17
கருங்கல் அருகே செல்லங்கோணம் பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ் (46). கான்ட்ராக்டர். இவர் கடந்த 6 . 3. 2018 அன்று தனது மகளை அதே பகுதியை சேர்ந்த ஒரு கும்பல் கல்லூரி செல்லும் வழியில் கேலி கிண்டல் செய்வதாக கருங்கல் காவல் நிலையத்தில் புகார் கூறினார். பிரான்சிஸ் காவல் நிலையத்தில் ஆஜராகி விட்டு இரவு வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருக்கும்போது, அவரது மகளை கேலி கிண்டல் செய்த கும்பல் பிரான்சி வெட்டி கொலை செய்தது.
இது தொடர்பாக பிரான்சிஸ் மனைவி மேரி என்பவர் புகார் அளித்ததன் பேரில் 4 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் நான்காவது குற்றவாளி அதே பகுதியை சேர்ந்த சுபி (40) என்பவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 7 ஆண்டாக தலைமுறையாக இருந்தார். அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என பிரான்சிஸ் குடும்பத்தினர் குற்றம் சட்டி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் பிரான்சிஸ் மனைவி மேரி, குமரி எஸ் பி ஸ்டாலினை நேரில் சந்தித்து புகார் செய்தார். எஸ்பி உத்தரவின் பேரில் கருங்கல் போலீசார் சுபியை கேரள மாநிலம் சங்கனாச்சேரி என்ற பகுதியில் நேற்று கைது செய்தனர். அவரை பத்மநாபபுரம் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


