தென்காசி வடக்கு மாவட்டம் சங்கரன்கோவிலில் வடக்கு மாவட்ட ஆதி திராவிடர் நலக்குழு சார்பில் கௌரி சங்கர் தியேட்டர் சாலையில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. தலைமை செயற்குழு உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான தங்கவேலு தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் மாவட்ட துணை செயலாளர் புனிதா, ஒன்றிய செயலாளர்கள் லாலாசங்கரபாண்டியன், கடற்கரை, கிறிஸ்டோபர் , நகர செயலாளர் பிரகாஷ், பொதுகுழுஉறுப்பினர் மகேஸ்வரி , மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் பிச்சையா, தொமுச மண்டல அமைப்பு செயலாளர் மைக்கேல் நெல்சன் கவுன்சிலர்கள் விஜயகுமார் அலமேலு மற்றும் வாழைக்காய் துரை பாண்டியன் வர்த்தகர் அணி ரகுமான் உள்பட திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மாவட்ட ஆதி திராவிடர் நலக்குழு அமைப்பாளர் கேஎஸ்எஸ் மாரியப்பன் சிறப்பாக செய்திருந்தார்.



