மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான திருவாலங்காட்டில் பங்குனி உத்திர பிரம்மோற்சவம் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ வண்டார்குழலி அம்பிகை உடனாகிய ஸ்ரீ வடாரண்யேசுர சுவாமி திருக்கோவிலில் திருத்தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக இக்கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து சுவாமி சந்திர பிறை வாகனம், சிம்ம வாகனம், கற்பக விருட்சம் உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவாவடுதுறை 24 ஆவது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசியக பரமாச்சாரியார் சுவாமிகள் தேறினை வடம் பிடித்து இழுத்து துவங்கி வைத்தார். தேர் கோவிலில் நான்கு ரத வீதிகளில் சுற்றி வந்து தன் நிலையை அடைந்தது. தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவாலங்காட்டில் பங்குனி உத்திர பிரம்மோற்சவம்

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics