தக்கலை, ஏப்- 9
அழகியமண்டபம் அடுத்த கூட்டமாவு பகுதியை சேர்ந்தவர் எம். எல் ராஜா. இவர் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரராக உள்ளார். இவர் மீதான 6 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இது தவிர தக்கரை காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி பட்டியலிலும் இடம் பிடித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். நேற்று இருசக்கர வாகனத்தில் கூட்டமாவு வழியாக வந்த வில்லுகுறி பகுதியை சேர்ந்த பைக் மெக்கானிக் ராஜேஷ்குமார் என்பவரை தனது இருசக்கர வாகனத்தை கொண்டு மோதுவது போல் நிறுத்தியுள்ளார். பின்னர் அவரை இரும்பு ராடால் தாக்கியதுடன், மிரட்டி சட்டை பையில் இருந்த 650 ரூபாய் பணத்தை பறித்து சென்றுள்ளார்.
இது குறித்து ராஜேஷ் குமார் தக்கலை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் ராஜா மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரை சிறையில் அடைத்து உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.